மெழுகுவர்த்தி ஏந்தி ஊழியர்கள் போராட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 9:46 PM IST (Updated: 10 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.

பொள்ளாச்சி

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு செயலாளர் ஐஸ்டின் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 இதேபோன்று பாலக்காடு ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
1 More update

Next Story