தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 7:07 PM IST (Updated: 11 March 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நெகமம்

நெகமம் அடுத்த போளிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதிமணி(50). இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் பழனிச்சாமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் தீராத வயிற்று வலி குணமாகவில்லை. 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிச்சாமி நேற்று இரவு குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story