கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு


கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 March 2022 6:29 AM IST (Updated: 16 March 2022 6:29 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் செட்டிபுண்ணியம் ஊராட்சிக்கு சொந்தமான பயன்படுத்தாத கிணற்றில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story