தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு

மறைமலைநகரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் முருகனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் முருகன் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உடனே 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






