பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதியது


பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதியது
x
தினத்தந்தி 7 April 2022 11:00 PM IST (Updated: 7 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது

கொள்ளிடம்
கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமத்தில் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலை சுற்றி சுற்றுச்சவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் மோதியது. இதில், அந்த சுற்றுச்சுவர் சேதமடைந்தது. லாரியை ஓட்டி சென்ற டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story