பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதியது

x
தினத்தந்தி 7 April 2022 11:00 PM IST (Updated: 7 April 2022 11:00 PM IST)


பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது
கொள்ளிடம்
கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமத்தில் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலை சுற்றி சுற்றுச்சவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் மோதியது. இதில், அந்த சுற்றுச்சுவர் சேதமடைந்தது. லாரியை ஓட்டி சென்ற டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire