அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 8 April 2022 2:20 AM IST (Updated: 8 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. 
ஏலம்
அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. 
இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
ரூ.38¾ லட்சம்
பருத்தி 1,054 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.11 ஆயிரத்து 232-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.13 ஆயிரத்து 32-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.38 லட்சத்து 81 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 7 ஆயிரத்து 706 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் சிறிய தேங்காய் ஒன்று 5 ரூபாய் 62 காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 14 ரூபாய் 72 காசுக்கும் என மொத்தம் ரூ.71 ஆயிரத்து 108-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொப்பரை தேங்காய் 52 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 889-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 69-க்கும் என மொத்தம் ரூ.71 ஆயிரத்து 889-க்கு விற்கப்பட்டது. 
நிலக்கடலை
67 மூட்டைகளில் நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் நிலக்கடலை (பச்சை) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 551-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 550-க்கும், நிலக்கடலை (காய்ந்தது) குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 761-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 510-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
 ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
1 More update

Next Story