நவீன தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நவீன தகன மேடை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்ேபட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுைகயிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
நவீன தகன மேடை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்ேபட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுைகயிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவீன தகனமேடை
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பொட்டிக்கான்பள்ளம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடி மதிப்பில் நவீன தகனமேடை அமைக்கும் பணிக்காக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். அங்கு, நவீன தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது.
இதையறிந்த 1-வது வார்டு பொதுமக்கள் திடீரென திரண்டு வந்து நவீன தகனமேடை அமைக்கும் பணியை உடனே கைவிட வேண்டும், எனக் கோரிக்கை வைத்தனர். அத்துடன் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து 1-வது வார்டு பொதுமக்கள் கூறியதாவது:-
ைகவிட ேவண்டும்
ஜோலார்பேட்டை நகராட்சி 1-வது வார்டு பொட்டிக்கான் பள்ளத்தில் ஏற்கனவே நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. அதை, முறையாகப் பராமரிக்காததால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
தற்போது நவீன தகனமேடை அமைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல் ஏற்படும். அந்த வழியாக செல்வோக்கு அச்சம் ஏற்படும். எனவே நவீன தகனமேடை அமைக்கும் பணியை உடனே கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பழனி கூறியதாவது:-
எந்த பாதிப்பும் ஏற்படாது
தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியோடு ஜோலார்பேட்டை பொட்டிக்கான் பள்ளத்தில் ரூ.1½ கோடியில் நவீன தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது. நவீன தகனமேடையில் கியாஸ் மூலம் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்படும்.
பொதுவாக விறகுகளை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டால் குறைந்தது 10 மணி நேரமாவது ஆகும். இதுவே கியாஸ் மூலம் எரிக்கப்பட்டால், அதிகப்பட்சமாக 3 மணி நேரத்துக்குள் இறந்தவர்களின் உடல்களை எரித்து சாம்பலாக்கி விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
Related Tags :
Next Story