ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயம்

x
தினத்தந்தி 10 April 2022 10:09 PM IST (Updated: 10 April 2022 10:09 PM IST)


ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயமானார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரின் கள் மதுமித்ரா (20). இவருக்கும் சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான புஷ்பராஜ் என்பவருக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இரவு வீட்டில் இருந்த மதுமித்ரா திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.
மதுமித்ராவை காணவில்லை என தந்தை முருகன் ஜோலார்பேட்டை போலீசில் புகாா் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ைண தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire