அனுமதியின்றி விளம்பர பதாகை; அச்சகம் மீது வழக்கு

x
தினத்தந்தி 11 April 2022 4:32 AM IST (Updated: 11 April 2022 4:32 AM IST)


அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டது தொடர்பாக அச்சகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே இசைக்கச்சேரி தொடர்பாக அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விளம்பர பதாகையை அச்சிட்ட உறையூரில் உள்ள அச்சகம் மற்றும் அதை வைத்தவர் மீது தில்லைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire