சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்குதல் மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொலை வழக்காக மாற்றி விசாரணை

கோவை அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்கப்பட்ட மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துடியலூர்
கோவை அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்கப்பட்ட மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாரில் மது அருந்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் கோவை துடியலூர் அம்பிகா நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இந்த பாருக்கு வெள்ளக்கிணறு பகுதியை பிரேனேஷ் (21), இடையர்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (23) ஆகியோர் மது குடிக்க வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பாரில் அமர்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்கள் விக்னேஸ்வரனை அழைத்து சில உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டனர்.
கல்லால் தாக்கினர்
பின்னர் பணம் கொடுக்காமல் 2 பேரும் வெளியே சென்றனர். உடனே அவர்களிடம் விக்னேஷ்வரன் பணம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கீழே கிடந்த கல்லால் விக்னேஸ்வரனை தாக்கினார்கள்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின்பேரில் துடியலூர் போலீசார் அடிதடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயகுமார், பிரனேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உயிரிழப்பு
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அறைக்கு திரும்பிய விக்னேஸ்வரன், தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






