வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு


வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு
x
தினத்தந்தி 18 April 2022 3:52 PM IST (Updated: 18 April 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் குறிஞ்சிநகரில் வசித்து வருபவர் முருகேசன். நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனைக்கண்ட முருகேசன் குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு மாடிப்படிக்கு கீழே பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். 

அந்த பாம்பு 4 அடி இருந்தது. அது, நாகப்பாம்பு ஆகும். பிடிபட்ட பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
1 More update

Next Story