மது விற்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 24 April 2022 10:02 PM IST (Updated: 24 April 2022 10:02 PM IST)
மது விற்ற வாலிபர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை ஒட்டி முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து ஒருவர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் வடகோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





