100 வயது மூதாட்டியின் கால்களை துண்டாக வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்ற கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!


100 வயது மூதாட்டியின் கால்களை துண்டாக வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்ற கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!
x

வெள்ளி கொலுசுகளை திருடுவதற்காக, மூதாட்டியின் கால்கள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 100 வயதை கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், "மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, மூதாட்டியின் காலை, ஒரு கும்பல் அறுத்துச் சென்றது.

இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எனது மருமகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது தாயார் ஆபத்தான நிலையில் வீட்டிற்கு வெளியே காணப்பட்டதாக அவர் கூறினார். மூதாட்டியின் கழுத்தில் காயங்கள் இருந்தன மற்றும் அவரது கால் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆகவே கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன" என்று கவலையுடன் கூறினார்.

இதனை தொடர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 100 வயது இருக்கும், மேலும் அவர் அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அதில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்தார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story