மராட்டிய மாநிலத்தில் 172 பேருக்கு கொரோனா தொற்று; 10 ஜே.என்.1 வகை பாதிப்புகள் உறுதி


மராட்டிய மாநிலத்தில் 172 பேருக்கு கொரோனா தொற்று; 10 ஜே.என்.1 வகை பாதிப்புகள் உறுதி
x

கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மும்பை,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தானே மாநகராட்சியில் அதிக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் மராட்டிய மாநிலத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை 137 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story