ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு.!


ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு.!
x

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

குருகிராம்,

அரியானா மாநிலத்தில் ஓடும் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும் பிரதான சாலையில் ஜார்சா மேம்பாலம் அருகே இரவு இந்த சம்பவம் நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேருந்து எரிந்ததில் தீக்காயமடைந்த பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story