மம்தா பானர்ஜி ஊழல்களின் சாம்பியன் - பா.ஜனதா கண்டனம்


மம்தா பானர்ஜி ஊழல்களின் சாம்பியன் - பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 21 Dec 2016 2:45 PM GMT (Updated: 21 Dec 2016 2:45 PM GMT)

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி; இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற, தொழில்நுட்ப ரீதியாக முறையற்ற செயல் ஏன் எடுக்கப்பட்டது? இது கூட்டாட்சி தத்துவ முறைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.


புதுடெல்லி,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் என்ற கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜியை ஊழல்களின் சாம்பியன் என பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி; இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற, தொழில்நுட்ப ரீதியாக முறையற்ற செயல் ஏன் எடுக்கப்பட்டது? இது கூட்டாட்சி தத்துவ முறைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். 

இதுபோன்ற சோதனைகள் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா மீதும் மற்றவர்கள் மீதும் ஏன் எடுக்கப்படவில்லை என்றார். மேலும், ஊழல் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்தான். தலைமைச் செயலாளருக்கு எதிரான இந்த சோதனையை நடத்துவதற்கு முன்பு சில வரைமுறைகளை பின்பற்றி இருக்கவேண்டும். வருமான வரித் துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் ஏதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்திருந்தால் அவரை முதலில் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதன்பிறகு இந்த திடீர் நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள மம்தா பானர்ஜி ஏற்கனவே டெல்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சம்பவத்தினையும் சுட்டிக் காட்டினார். 

இந்நிலையில் வருமான வரித்துறை நடத்திய சோதனையை பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜியை ஊழல்களின் சாம்பியன் என பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.  பா.ஜனதாவின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங், தனது டுவிட்டர் பதிவில், ‘‘மம்தா பானர்ஜி ஊழல்களின் சாம்பியன். எனவே தான் அவர் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் பொறுப்பில் உள்ள ஒருவர் ஆவார். அவருக்கு சட்ட நடைமுறைகளை முழுமையாக தெரியும். அப்படி இருந்தும் அவர் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசுவது ஏன் என்பது புரியவில்லை’’ என்றார்.


Next Story