உத்தரபிரதேச சட்ட மேலவை இடைத்தேர்தல்: முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் மனுதாக்கல்


உத்தரபிரதேச  சட்ட மேலவை இடைத்தேர்தல்: முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் மனுதாக்கல்
x
தினத்தந்தி 5 Sep 2017 1:42 PM GMT (Updated: 5 Sep 2017 1:42 PM GMT)

உத்தரபிரதேச சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.பி. யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்–மந்திரியாக பொறுப்பேற்றார். இதேபோல் மற்றொரு எம்.பி. கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். இந்த மந்திரிசபையில் உள்ள மற்றொரு துணை முதல்–மந்திரி தினேஷ் சர்மா, மந்திரிகள் மோசின் ரஸா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் சட்டசபையின் இரு அவைகளிலும் இல்லை.

ஆதித்யநாத் உள்பட 5 பேரும் சட்ட மேலவை எம்.எல்.சி.யாக பதவி ஏற்கும் விதமாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 4 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்கள் எம்.எல்.சி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில் சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் உள்பட 5 பேரும் இன்று மனுதாக்கல் செய்தனர். இதற்கான வாக்குப்பதிவு 15–ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Next Story