நேருவின் 128-வது பிறந்தநாள்: பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மரியாதை


நேருவின் 128-வது பிறந்தநாள்: பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மரியாதை
x
தினத்தந்தி 14 Nov 2017 3:24 AM GMT (Updated: 14 Nov 2017 3:31 AM GMT)

நேருவின் 128-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேருவின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் மரியாதை செலுத்தினார். 

பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில், நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில்,  ஜவஹர்லால் நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி அவரை நினைவு கூர்வதாகவும், தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என  தெரிவித்துள்ளார்.

பண்டித ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்த நேரு, 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி உயிரிழந்தார். நேருவின் பிறந்த நாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


Next Story