இறந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணி பரிமாற்ற உத்தரவு வழங்கிய டிஜிபி ஆபீஸ்


இறந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணி பரிமாற்ற உத்தரவு வழங்கிய டிஜிபி ஆபீஸ்
x
தினத்தந்தி 13 Dec 2017 12:08 PM IST (Updated: 13 Dec 2017 12:08 PM IST)
t-max-icont-min-icon

ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஆந்திர டி.ஜி.பி. அலுவலகம் பணி பரிமாற்ற உத்தரவு வழங்கி உள்ளது.


ஆந்திராவில்  போலீஸ் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராமன்ஜானியுலு கடந்த  6 மாதங்களுக்கு முன் உடல் நலமின்றி  மரணம் அடைந்தார்.இந்த நிலையில் ராமன்ஜானியுலுக்கு திருப்பதி போலீஸ் சிறப்பு பிரிவில் பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து  உத்தரவு சென்று உள்ளது.

அவரது இடம் மாற்றப்பட்ட 16 டிஎஸ்பிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது, மேலும் அவர் மங்களகிரியில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்கு அறிக்கை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

மறைந்த போலீஸ் அதிகாரியின் இறுதி சங்கில் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இருந்தாலும் அவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்ததை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதை தொடர்ந்து போலீஸ் டிஜிபி நந்தூரி  சம்பசிவா ராவ்  இது குறித்து ஒரு விசாரணைக்கு  உத்தரவிட்டு உள்ளார். இது ஒரு எழுத்தர் பிழை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. தற்போது இந்த உத்தரவு ரத்து  செய்யப்பட்டு உள்ளது. 

துணை முதலமைச்சர் சினா ராஜப்பாவும் போலீஸ் அறையில் , என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
1 More update

Next Story