நீதிபதி லோயா மரணம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணை கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. #SupremeCourt #JudgeLoya
புதுடெல்லி,
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போ தைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷா வை விடுவித்து உத்தரவிட்டார்.
“நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக் கை விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
Related Tags :
Next Story