குட்கா வழக்கை சிபிஐயே விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் அதிரடி


குட்கா வழக்கை சிபிஐயே விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் அதிரடி
x
தினத்தந்தி 18 May 2018 10:48 AM IST (Updated: 18 May 2018 10:48 AM IST)
t-max-icont-min-icon

குட்கா வழக்கை சிபிஐயே விசாரிக்கும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் சுகாதாரத்துறை அதிகாரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய குட்கா ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. எனவே அதுதொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியது 

இதனிடையே குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்கக்கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என தெரிவித்து, சிவக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
1 More update

Next Story