ஜம்மு காஷ்மீரில் 7-ஆம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது


ஜம்மு காஷ்மீரில் 7-ஆம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்:  வாக்குப்பதிவு துவங்கியது
x
தினத்தந்தி 4 Dec 2018 4:27 AM GMT (Updated: 4 Dec 2018 4:27 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. 

341 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1798 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5575 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2714 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 576, ஜம்மு 2138) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 892 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 912 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


Next Story