உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: மனைவி, 3 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை


உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: மனைவி, 3 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2019 8:28 PM GMT (Updated: 3 Feb 2019 8:28 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மனைவி, 3 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா. வியாபாரியான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று தனது மனைவிக்கும், மகன் மற்றும் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்தார். இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர், ரமேஷ் குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story