பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து


பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து
x
தினத்தந்தி 19 Feb 2019 6:50 AM GMT (Updated: 19 Feb 2019 6:50 AM GMT)

பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது.

பெங்களூரு,

பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள், விமான கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. இந்த பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும்  விபத்துக்குள்ளாகின.

யெலகங்கா விமானப்படை விமான தளத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இரு விமானங்களின் விமானிகளும் பாதுகாப்பாக வெளியே குதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

Next Story