ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 May 2019 3:14 AM GMT (Updated: 10 May 2019 3:14 AM GMT)

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில்  பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.  

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story