ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 17 Jun 2019 8:14 AM GMT (Updated: 17 Jun 2019 8:14 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த சண்டையில், பாதுகாப்பு படையினர் தரப்பில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் ஒரு வீரர் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story