புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில்


புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில்
x
தினத்தந்தி 3 July 2019 8:30 PM GMT (Updated: 2 July 2019 7:32 PM GMT)

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மக்களவையில், உள்துறை இணை மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதிலளித்து பேசியதாவது:-

புல்வாமா சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டதிலும், செயல்படுத்தியதிலும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தாக்குதலில் 5 பேர் ஈடுபட்டனர். அதில் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர் இழந்தார். இதையடுத்து 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.


Next Story