தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

x
தினத்தந்தி 19 Aug 2019 4:28 PM IST (Updated: 19 Aug 2019 4:28 PM IST)
ஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாவி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 2 பேர் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





