தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு


தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம்  மீட்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:58 AM GMT (Updated: 19 Aug 2019 10:58 AM GMT)

ஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தாவி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 2 பேர் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

Next Story