ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு


ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sep 2019 7:02 PM GMT (Updated: 16 Sep 2019 7:02 PM GMT)

ஆந்திராவில் படகு விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ராஜ முந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்தார்.

இந்த விபத்து பற்றி உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.


Next Story