மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக இருப்பார் -சஞ்சய் ராவத்

மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக இருப்பார் என மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
மும்பை
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே வைத்த கோரிக்கையால் ஆட்சி அமைக்க இழுபறி நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரே தலைமை தாங்கினார். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதில் சட்டசபை சிவசேனா தலைவராக பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே மீண்டும் சட்டசபை சிவசேனா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மராட்டியத்தில் மராட்டியத்தில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் - காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
நேற்று சரத்பவாரை சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். இது மாரட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக இருப்பார். சிவசேனா முடிவு செய்தால், அது மாநிலத்தில் அரசை அமைக்க தேவையான எண்களைப் பெறும். மராட்டிய மக்கள் முன் ஏற்படுத்தப்பட்ட 50-50 என்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்த அடிப்படையில் மக்கள் அரசாங்கத்தை அமைக்க ஆணை வழங்கியுள்ளனர். அவர்கள் சிவசேனாவிலிருந்து முதலமைச்சரை விரும்புகிறார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story