காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு


காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Nov 2019 6:30 PM GMT (Updated: 3 Nov 2019 6:16 PM GMT)

காஷ்மீரில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சாம்ரோலி கிராமத்திற்கு அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 7 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story