இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது, அதில் தங்கம் இருக்கு! கண்டுபிடித்த பாஜக தலைவர்


இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது, அதில் தங்கம் இருக்கு! கண்டுபிடித்த பாஜக தலைவர்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:48 AM GMT (Updated: 5 Nov 2019 11:48 AM GMT)

இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது தெரியுமா? அதில் தங்கம் இருக்கு என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் கூறி உள்ளார்.

கொல்கத்தா

மேற்கு-வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று 5-வது அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்துள்ளார். ஆனால்  மாநில பாஜக தலைவர் ஒரு வினோதமான தகவலை கூறி உள்ளார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில்  உள்ள பர்த்வானில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாட்டுப் பாலை உட்கொண்டு உயிரோடு நாம் இருக்கிறோம். எனவே, யாராவது என் தாயுடன் தவறாக நடந்து கொண்டால், அவர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நான்  நடத்துவேன்.

இந்திய பசுக்களின் "பாலில் தங்கம் கலக்கிறது" அதனால்தான் பாலின் நிறம் சற்று மஞ்சள் நிறத்தில் உள்ளது. இந்திய மாடுகளுக்கு ஒரு இரத்த நாளம் உள்ளது, அது சூரிய ஒளியின் உதவியுடன் தங்கத்தை உற்பத்தி செய்ய  உதவுகிறது.

வெளிநாட்டிலிருந்து நாம் கொண்டு வரும் பசுக்களின் இனங்கள் மாடுகள் அல்ல. அவை மிருகங்கள். அவர்கள் எங்கள் கோமாதா அல்ல, ஆனால் எங்கள் அத்தைகள். இதுபோன்ற அத்தைகளை நாம் வணங்கினால் அது நாட்டுக்கு நல்லதல்ல.

சில புத்திஜீவிகள் சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள், நான் அவர்களை நாய் இறைச்சியையும் சாப்பிடச் சொல்கிறேன், அவர்களின் ஆரோக்கியம் அவர்கள் எந்த விலங்கை சாப்பிடுகிறதோ அதைக் கொண்டிருக்கும், ஆனால் ஏன் சாலைகளில் சாப்பிடுகிறீர்கள்? உங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் என கூறினார்.

திலீப் கோஷ் முதல் முறையாக இது போன்ற சர்ச்சைகருத்துக்களை வெளியிடவில்லை. அடிக்கடி இதுபோல் வினோதமான கருத்துக்களை வெளியிடுவார்.

Next Story