ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2019 4:02 AM GMT (Updated: 12 Nov 2019 4:02 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் இன்று காலை தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பலியான நபரிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபுரா பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லக்சர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story