குடியுரிமை சட்டம் ‘சாவர்க்கர் கொள்கைக்கு எதிரானது’ - உத்தவ் தாக்கரே கருத்து


குடியுரிமை சட்டம் ‘சாவர்க்கர் கொள்கைக்கு எதிரானது’ - உத்தவ் தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 15 Dec 2019 6:30 PM GMT (Updated: 15 Dec 2019 6:08 PM GMT)

குடியுரிமை சட்டம், சாவர்க்கர் கொள்கைக்கு எதிரானது என்று உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, நேற்று நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டம், சித்தாந்தம் அடிப்படையிலானதா? அப்படியானால், அதற்கு எதிராக நடந்த வன்முறை குறித்து என்ன சொல்வது?

இந்த குடியுரிமை சட்டம், சிந்து நதி முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக விளங்க வேண்டும் என்று விரும்பிய சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது என்று அவர் கூறினார்.


Next Story