பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும் -இந்திய முப்படை தளபதி


பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும் -இந்திய முப்படை தளபதி
x
தினத்தந்தி 16 Jan 2020 8:42 AM GMT (Updated: 16 Jan 2020 11:00 AM GMT)

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும் என இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த ரைசினா 2020  உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பு நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) வின் முயற்சிகளையும் பாராட்டினார்.

பிபின் ராவத் பேசும்போது கூறியதாவது:-

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும். இதுபோன்ற நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகள் இருக்கும் வரை அவர்கள்  பயங்கரவாதத்தை அங்கு வைத்திருப்பார்கள். அவர்கள் பயங்கரவாதிகளை பிரதிநிதிகளாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கச் செய்கிறார்கள், அவர்களுக்கு நிதியுதவி கிடைக்க செய்கிறார்கள், பின்னர் பயங்கரவாதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது . 

 "நீங்கள் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் எவரையும் பட்டியலிட வேண்டும்."

"நாம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அது  அமெரிக்க இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கர்கள் தொடங்கிய வழியில்தான் நடக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான  போரில் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறினர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும், அதன் வேரை அடையும் வரை நான் அதனுடன் போரிட  வேண்டியிருக்கும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சிறந்த தீர்வு  நாம்  பயங்கரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும். இது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல, இதைச் செய்யும் அனைத்து நாடுகளுக்கும். ஆம், அவர்கள் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் என்பதை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தலிபான் உட்பட யாருடனும் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும். அரசியல் பிரதான நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்பதை அவர்கள் (தலிபான்) புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story