'பூமி திருத்தி உண்’- பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்
புதுடெல்லி,
2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது, விவசாய வளர்ச்சி தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார்.
அப்போது பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டி பேசினார். ”பூமி திருத்தி உண்” என்ற 3 வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவ்வையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா கூறினார்.
Related Tags :
Next Story