ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி


ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Aug 2020 2:35 PM GMT (Updated: 2 Aug 2020 2:35 PM GMT)

ஆந்திராவில் மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவில் இன்று மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,764 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,474 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 82,886 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 74,404 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story