மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் மற்றும் பெண் கைது


மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் மற்றும் பெண் கைது
x
தினத்தந்தி 17 Aug 2020 3:11 AM GMT (Updated: 17 Aug 2020 3:11 AM GMT)

மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெல்லி சாலையில் சுப்ரமணியம் என்பவர் தனது வீட்டின் அருகே இடுக்கில் ஒரு கோணிப்பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தப்போது அதில் மனித தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தனது வீட்டிலிருந்தப்படி, அந்த பையை கண்காணித்த போது, அருகேயுள்ள பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் அதனை எடுத்து செல்வதை பார்த்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து ராஜு வீட்டின் ஜன்னல் வழியாக சுப்ரமணியம் பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜுவும் அவருடன் இருந்த ஒரு இளம்பெண்னும் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராஜுவையும், அவருடன் தங்கி இருந்த பெண்ணையும் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜுவின் தந்தை இறப்பை தொடர்ந்து, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரிய வந்தது. ராஜு அடுப்பில் சுட்டு சாப்பிட்ட மனித தலை மயானத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ராஜூவுடன் இருந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story