மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.5 ஆக பதிவு


மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 6 Oct 2020 5:17 PM GMT (Updated: 6 Oct 2020 5:17 PM GMT)

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று இரவு 9.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

கடந்த வாரம் குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் ரிக்டரில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடந்த ஞாயிற்று கிழமை அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்நிலையில், மராட்டியத்தின் பால்கரில் இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Next Story