பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு கண்டுபிடிப்பு;ஈராக் - சிரியாவிலிருந்து திரும்பிய 14 பேர் கைது


பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு கண்டுபிடிப்பு;ஈராக் - சிரியாவிலிருந்து திரும்பிய 14 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 1:12 PM GMT (Updated: 8 Oct 2020 1:12 PM GMT)

பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து திரும்பி வந்த 14 ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


பெங்களூரு

தேசிய புலனாய்வு அமைப்பு பெங்களூரில் செயல்பட்ட ஒரு ஐஎஸ் அமைப்பை கண்டறிந்து உடைத்து. அதன் இரண்டு செயல்பாட்டாளர்களான அஹ்மத் அப்துல் கேதர்(40) மற்றும் பெங்களூரைச் சேர்ந்த இர்பான் நசீர் (33) ஆகியோரை புதன்கிழமை கைது செய்துள்ளது. 

2013-14 ஆம் ஆண்டில் பெங்களூரிலிருந்து குறைந்தது 13-14 பேர் ஈராக் மற்றும் சிரியாவுக்குச் சென்றதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது. அவர்களில் இருவர் சிரியாவில் ஐ.எஸ்.க்காக போராடும் போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, சிலர் 2014 ல்  திரும்பினர் அவர்களில் பலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

பெங்களூரில் செயல்பட்ட அமைப்பின்  அனைத்து உறுப்பினர்களையும் தேசிய புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள  விசாரணை நடந்து வருகிறது. 

அப்துல் கேதர் மற்றும் அவரது குடும்ப வியாபாரத்தை நடத்தி வரும் நசீர் ஆகியோர், அந்த தொகுதியின் பெரும்பாலான உறுப்பினர்களை தீவிரமயமாக்கியதாகவும், குறைந்தபட்சம் அதன் ஐந்து உறுப்பினர்களின் பயணத்திற்கு நிதி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இருந்து 2016 இல் 22 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய தொகுதி ஈராக் மற்றும் சிரியாவுக்குச் சென்றது. இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு இதுவரை பயணம் செய்த மிகப்பெரிய குழு இது என்று நம்பப்படுகிறது.

ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 2014 முதல் பல செயல்பாட்டாளர்கள் பயணம் செய்துள்ளனர், ஆனால் சிறிய குழுக்களாக அல்லது தனித்தனியாக. "காசர்கோட் தொகுதி மிகப்பெரிய தொகுதியாக இருந்தது, இப்போது 13-14 பேர் ஒன்றாகச் சென்றதால் இந்த சமீபத்திய பெங்களூரு  குழு பெரியதாகத் தெரிகிறது" என்று பெயர் தெரியாத ஒரு அதிகாரி கூறினார்.

Next Story