மராட்டியத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 20 Dec 2020 9:41 AM GMT (Updated: 20 Dec 2020 9:41 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில்  கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.  நேற்று புதிதாக 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,92,707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 48,648 ஆக அதிகரித்துள்ளது.

 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பிற மாநிலங்களில் உள்ளது போல மராட்டியத்திலும்  முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டியத்தில் மேலும் 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-மாநிலத்தில் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டது எனச் சொல்லமுடியவில்லை. ஆனால், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது.  எனவே, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது குறைந்தது இன்னும் ஆறு மாதங்களுக்கு ஒரு பழக்கமாக வைத்திருக்க வேண்டும்” என்றார். 

Next Story