இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக பொய்பிரசாரத்தை தொடங்கி உள்ள சீனா


இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக பொய்பிரசாரத்தை தொடங்கி உள்ள சீனா
x
தினத்தந்தி 25 Jan 2021 10:48 AM GMT (Updated: 25 Jan 2021 10:48 AM GMT)

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக சீனா குளோபல் டைம்ஸ் மூலம் பொய் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

புதுடெல்லி

இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்கப்பட்டு இன்று 10-வது நாளை எட்டியுள்ளது.  நாடு முழுவதும் இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வ போது வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நேற்றுவரை நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் 16 லட்சத்து 13 ஆயிரத்து 667 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்தில் இதுவரை 61 ஆயிரத்து 720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தவிர அனைத்து சார்க் நாடுகளுக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்நாட்டில் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியா ஏற்கனவே பரிசாக வழங்கியுள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி இந்தியா 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை இலங்கைக்கு நன்கொடையாக அளிக்கும் அதே வேளையில், உள்ளூர் கட்டுப்பாட்டாளர் அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தவுடன் ஆப்கானிஸ்தான் கொரோனா தடுப்பூசிக்கான இந்தியாவின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்று ஆப்கானிஸ்தானுக்கு  அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கம்  தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை பின்னுக்குத் தள்ளி வருவதால், சீன அரசாங்க ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை  இழிவுபடுத்துவதற்காக ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பிய குளோபல் டைம்ஸ் , சீனாவில் உள்ள இந்தியர்கள் சீன தடுப்பூசிகளை  போட்டுக்கொள்வார்கள் என்றும் கூறி உள்ளது.  இந்தியாவின் ‘தடுப்பூசி இயக்க ’ முயற்சிக்கு எதிரான பிர்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

நோயாளிகளின் உரிமைக் குழுவான அகில இந்திய மருந்து நடவடிக்கை நெட்வொர்க்கின்  பிபிசி அறிக்கையை குளோபல் டைம்ஸ்  மேற்கோள் காட்டி தடுப்பூசிக்கான "பிரிட்ஜிங் ஆய்வை" சீரம் நிறுவனம்  முடிக்காமல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தடுப்பூசி தடுப்பு பரிசோதனையை நடத்த முயற்சிப்பதாக நிறுவனம் கூறியுள்ளது ”என்று அது கூறி உள்ளது.

"உயர்தர தடுப்பூசி உற்பத்தியில் மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும்" என்றும், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் இந்திய அரசாங்கத்தின் அபிலாஷைகளை கடைப்பிடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறி அநாமதேய "நெட்டிசன்கள்" மற்றும் ஆய்வாளர்களை குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டி உள்ளது.

மற்றொரு கட்டுரையில், குளோபல் டைம்ஸ் இந்திய உணவகத் தொழிலாளர்களை மேற்கோள் காட்டி, இந்த தடுப்பூசிகளின் தரம் குறித்து எந்த சந்தேகம் உள்ளதால்  சீன தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் இந்திய தடுப்பூசி கோவாக்சின் ஏற்கத் தயங்குகிறார்கள் என்று இந்திய ஊடக அறிக்கைகளையும் அது எடுத்துக்காட்டி உள்ளது.

Next Story