நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2021 5:55 AM GMT (Updated: 1 Feb 2021 5:55 AM GMT)

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்  செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
  • சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமான
  • கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • சுயசார்பு திட்டம் நமக்கு புதிதல்ல. பழங்கால இந்தியா சுயசார்பாகவே இருந்தது
  • சுயசார்பு திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  
  • 2021- ஆம் ஆண்டிலும் கொரொனாவுக்கு எதிரான போர் தொடரும்
  • ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் 130 கோடி  இந்தியர்களின் நம்பிக்கை
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி 
  • பொருளாதாரம் மீட்சி பெற மத்திய பட்ஜெட் உதவும்: 
  • கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
  • மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது
  • கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி
  • பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை


Next Story