மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா  பாதிப்பு
x

மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3,879 பேர் பாதிப்பு

தலைநகா் மும்பையில் ஏப்ரல் மாதம் தினந்தோறும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் மேலும் 3 ஆயிரத்து 879 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 299 ஆக உயர்ந்து உள்ளது.

77 ேபர் பலி

இதேபோல நகரில் மேலும் 77 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை நகரில் 13 ஆயிரத்து 547 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 123 நாட்களாக உயர்ந்து உள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். தற்போது நகரில் 102 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளது. 728 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Next Story