கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் மூலிகை மருந்தை மீண்டும் வினியோகிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை


கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் மூலிகை மருந்தை மீண்டும் வினியோகிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 1:48 PM GMT (Updated: 29 May 2021 1:48 PM GMT)

ஆந்திராவில் கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் மூலிகை மருந்தை மீண்டும் வினியோகிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து உள்ளன.

விசாகபட்டினம்,

ஆனந்தய்யா மூலிகை மருந்தை வைத்து ஆந்திராவில் நெருக்கடி தொடர்பான ஒரு விசித்திரமான அரசியல் நடக்கிறது, அங்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா கட்சி  மக்களின் பொது மனநிலையை உணர்ந்து - சோதிக்கப்படாத மற்றும் அறிவியலற்ற மூலிகை மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்து உள்ளன.

 போனஜி ஆனந்தையா மூலிகை மருந்தை போலீஸ் பாதுகாப்போடு மீண்டும் வழங்க வழிவகை செய்ய வேண்டும் வேண்டும், அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சோமிரெட்டி சந்திர மோகன் ரெட்டி மற்றும்  தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கேதம் ரெட்டி வினோத் ரெட்டி ஆகியோர் கூறி உள்ளனர். 

ஆந்திராவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆனந்தையாவுக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன. 

அரசாங்க உத்தரவுகளை மீறி, சர்வேபள்ளி ககானி கோவர்தன் ரெட்டியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்.எல்.ஏ கடந்த வாரம் கிருஷ்ணாபட்டினத்தில் ஒரு பெரிய விநியோக இயக்கத்தை ஏற்பாடு செய்திருந்தார், அதே நேரத்தில் விஜயவாடாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஆய்வகத்தில் “மருந்து” “ஆய்வு” செய்யப்பட்டு வந்தது.

இந்த மோசடிக்கு ஒப்புதல் அளிக்கும் அரசியல் கட்சிகளின் நடத்தை குற்றம் என தெலுங்கானாவைச் சேர்ந்த சமூக விஞ்ஞானி பி.எல். விஸ்வேஸ்வர் ராவ்,  என்று கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது   அரசியல்வாதிகள் தங்கள் அறிவியல் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து விலக வேண்டும், இது ஏராளமான மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஆசைப்படுகிறார்கள். 

அரசியல் கட்சிகள் மோசடிகளை ஊக்குவிப்பது முற்றிலும் குற்றமாகும். ஏற்கனவே பலர் கண் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நேரத்தில், ‘பொது கோரிக்கையின்’ அடிப்படையில் மீண்டும் மூலிகை மருந்து விநியோகம் தொடங்க வேண்டும் என்று கோருவது பொறுப்பற்றது, ”

என்று விஸ்வேஸ்வர் ராவ் கூறினார்.

Next Story