மேற்கு வங்காளத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 May 2021 6:23 PM GMT (Updated: 31 May 2021 6:23 PM GMT)

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 10,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,377 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 131 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,541 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 17,856 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,73,788 ஆக அதிகரித்துள்ளது. 

மேற்கு வங்காளத்தில் தற்போது 87,048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story