டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தது - மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்


டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தது - மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2021 3:02 AM GMT (Updated: 7 Jun 2021 3:02 AM GMT)

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சந்தை மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கடைகள் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மெர்டோ ரெயில் சேவை 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஒன்றரை மாத ஊரடங்கிற்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊழியர்களை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றவே அனுமதிக்க வேண்டும் நிறுவனங்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. 

டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  

Next Story