மராட்டியத்தில் மேலும் 10,891-பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 10,891-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 Jun 2021 8:20 PM IST (Updated: 8 Jun 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,891- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2-வது கொரானா அலை உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாால் மாநிலத்தில் பாதிப்பு குறையத்தொடங்கியது. இதையடுத்து தற்போது மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  மாநிலத்தில் இன்று புதிதாக 10 ஆயிரத்து 891 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல், தொற்று பாதிப்பு காரணமாக 295- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 16,557- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 927- ஆக உள்ளது. 
1 More update

Next Story