மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை


மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை
x
தினத்தந்தி 11 Jun 2021 2:49 AM GMT (Updated: 11 Jun 2021 2:49 AM GMT)

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மும்பை,

இந்தியாவில் தென்மேற்கு பரவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சில பகுதிகளில் கனமழையால் வீடுகள் இடிந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.    

மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மராட்டியத்தில் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

Next Story