உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
ஆக்ரா,
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் படுகாயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
எனினும், செல்லும் வழியிலேயே 3 குழந்தைகளும் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 3 வயது முதல் 8 வயதுக்குள் இருக்கும். அவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமியும் அடங்குவார்கள்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story